திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் பயணியர் விடுதி சாலையில் தெரு விளக்குகள் சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கோயிலுக்கு செல்லும் பாதையான பயணியர் விடுதி சாலை பக்தர்கள் மற்றும் வாகனங்களால் எப்போதும் நிரம்பி வழியும். கடந்த சில நாள்களாக இங்குள்ள தாலுகா காவல்நிலையம் முதல் திரையரங்கு வரையில் தெருவிளக்குகள் எரியாமல் இருந்ததால், மாலை நேரங்களில் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது.
இந்நிலையில் மின்விளக்குகளை சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.