கோவில்பட்டி அருகே கூலித் தொழிலாளி மற்றும் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி கொலை செய்ய முயன்ற வியாபாரியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டியையடுத்த ஆலம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்து மகன் தங்கவேல்(56), கூலித் தொழிலாளி. இவரது உறவினர் பெளலாமேரி தனது மகள் கலையரசியுடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறாராம். பெளலாமேரி கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெளலாமேரியின் கணவர் ராஜபாளையம் கொல்லங்கொண்டானைச் சேர்ந்த பழ வியாபாரி பால்பாண்டி கலையரசி வீட்டிற்கு வந்து, மனைவி பெளலாமேரியை தன்னுடன் வரும்படி அழைத்தாராம். அவர் வர மறுத்ததையடுத்து அவதூறாகப் பேசி தகராறு செய்தாராம். இதனை தங்கவேலு, தட்டிக்கேட்டாராம்.
அதையடுத்து தங்கவேல் மற்றும் தகராறை தடுக்க வந்த பவுல்ராஜ் மகன் ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் ஆகிய இருவரையும் பால்பாண்டி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, பால்பாண்டியை செய்தனர்.