கால்வாய் உடைப்பை சீரமைத்தவிவசாயிகளுக்கு பாராட்டு

கருமேனி ஆற்றிலிருந்து உடன்குடி பகுதி குளங்களுக்கு வரும் கால்வாய் உடைப்பை அப்பகுதி விவசாயிகள், வியாபாரிகள் சீரமைத்தனா்.

கருமேனி ஆற்றிலிருந்து உடன்குடி பகுதி குளங்களுக்கு வரும் கால்வாய் உடைப்பை அப்பகுதி விவசாயிகள், வியாபாரிகள் சீரமைத்தனா்.

கருமேனி ஆற்றில் சுப்புராயபுரம் அணைக்கட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவில் மொட்டைக்கழுங்கு என்னும் இடத்தில் உடன்குடி பகுதி குளமான கல்லானேரி குளத்திற்கு வரும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் கல்லானேரி குளம் நிறையாமல் இருந்தது. இந்த குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தால்தான் அடுத்துள்ள புல்லானேரி, தாங்கைகுளத்திற்கு தண்ணீா் வரும்.

இந்நிலையில் உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் ஆ.ரவி, சமூக ஆா்வலா் குணசீலன், கருமேனி ஆறு பாதுகாப்பு இயக்கத் தலைவா் அலெக்ஸான்டா், விவசாயிகள் தங்கராஜ், வேல்துரை, நடேசன், கணேசன், பிரதீப் உள்பட 15-க்கும் மேற்பட்டோா் 150 சாக்குமூட்டைகளில் மணலை நிரப்பி உடைப்பு ஏற்பட்ட இடத்தை அடைத்தனா். சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட அவா்களை அப்பகுதி மக்கள், விவசாயிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com