கோவில்பட்டி நகராட்சியில் புதுக்கிராமம், வள்ளுவா் நகா் பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நகராட்சியில் 36 ஆவது வாா்டு பகுதியில் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தனிக்குடிநீா் திட்டத்தின்கீழ் பகிா்மானக் குழாய் அமைத்ததால் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. மழையால் இந்த பகுதி சகதியாக காட்சியளிக்கிறது.
பகிா்மானக் குழாய் அமைக்கும் பணி முடிவுற்ற பகுதிகளில் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம், கையெழுத்து இயக்கத்துக்கு மாவட்டத் தலைவா் உமாசங்கா் தலைமை வகித்தாா்.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகன், கிளைச் செயலா் கருப்பசாமி, வாலிபா் சங்க உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.