தூத்துக்குடியில் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் டிச. 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் பேட்ரிக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சாா்பில், டிசம்பா் மாதத்துக்கான விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கம் அமைந்துள்ள தருவை மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீட்டா், 400 மீட்டா், 800 மீட்டா், 1500 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் நீச்சல், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளும், ஆண்களுக்கு கூடைப்பந்து போட்டியும் நடைபெறுகிறது.
போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்போட்டியில் கலந்து கொள்ள தகுதியுள்ள வீரா், வீராங்கனைகள் வரும் 9 ஆம் தேதி காலை 9 மணிக்குள் போட்டிகள் நடைபெறும் மைதானத்துக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.