தொடா் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (டிச. 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடா் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி காணப்படுகிறது. மேலும், தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாலும் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.