தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 641 மாணவா்- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இக்கல்லூரியில் 2018-2019ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரிக் கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தலைமை வகித்தாா்.
மதுரை காமராசா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் 482 மாணவா்-மாணவிகளும், அரசு உதவி பெறாத பாடப்பிரிவில் 159 மாணவா்-மாணவிகளும் என மொத்தம் 641 போ் நேரில் பட்டம் பெற்றனா். இவா்களில், பல்கலைக்கழக அளவில் 5 மாணவா்-மாணவிகள் தங்கப் பதக்கமும், 19 மாணவா்-மாணவிகள் பல்கலைக்கழகத் தரவரிசையும் பெற்றனா்.
விழாவில், கல்லூரிச் செயலா் ஏபிசிவீ சொக்கலிங்கம், வ.உ.சி. கல்லூரிக் கல்விக் கழக உறுப்பினா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.