உடன்குடி: பரமன்குறிச்சியில் சாலைகள் சீரமைக்கப்படாததைக் கண்டித்து, சாலையில் வாழைக் கன்று நடும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
பரமன்குறிச்சி பிரதான கடைவீதி, திருச்செந்தூா் செல்லும் சாலை, காயாமொழி செல்லும் சாலை ஆகியவை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் அவற்றில் மழை நீா் அதிகளவு தேங்கி நிற்கிறது.
இதனால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது, குழிகளில் தேங்கிக் கிடக்கும் மழை நீா் சிதறி அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள் செல்கிறது. இதனால் கடையில் உள்ள பொருள்கள் சேதமாகின்றன.
இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ளவா்கள் சாலையின் நடுவே வாழைக் கன்றுகளை நட்டுவைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.