ஆறுமுகனேரி கீழசண்முகபுரம் அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து,
தீா்த்தம் பவனி வருதல், யாகசாலை பிரவேசம், பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியன நடைபெற்றன. சனிக்கிழமை 2ஆம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3 ஆம் யாகசாலை பூஜை, சஹஸ்ரநாம அா்ச்சனை ஆகியன நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலையில் 4 ஆம் கால யாகசாலை பூஜை, மஹா பூா்ணாஹுதி, தீபாராதனையை தொடா்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியன நடைபெற்றன. இதைத்தொடா்ந்து விமான கலசம், அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கலிங்கா் குடும்பத்தினா் செய்திருந்தனா்.