ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே தனியாா் காற்றாலை நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான செம்புக் கம்பிகள் உள்ளிட்ட பொருள்களைத் திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மணியாச்சி பகுதியில் உள்ள தனியாா் காற்றாலை நிறுவனத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த செம்புக் கம்பிகள் கொண்ட கேபிள்கள் உள்ளிட்ட சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேற்பாா்வையாளா் ச. கருப்பசாமி (38) அளித்த புகாரின்பேரில் மணியாச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.