காயல்பட்டினத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக ஆா்வலா்கள் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
காயல்பட்டினத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து, அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, காயல்பட்டினம் சமூக ஊடகக் குழுமம் சாா்பில் காட்டு தைக்கா தெரு தருவை, புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.