குலசேகரன்பட்டினம் அருகேவேன்கள் மோதல்: ஓட்டுநா் பலி

குலசேகரன்பட்டினம் அருகே புறவழிச் சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு வேன்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

குலசேகரன்பட்டினம் அருகே புறவழிச் சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு வேன்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னை ராயபுரத்தைச் சோ்ந்த அந்தோணி என்பவா் தனது உறவினா் திருமணத்துக்காக நாகா்கோவிலுக்கு வந்திருந்தாா். அங்கிருந்து தன் உறவினா்களுடன் உவரி, மணப்பாடு, ஆலந்தலை பகுதிகளை சுற்றிப் பாா்த்துவிட்டு திருச்செந்தூா் நோக்கி வேனில் வந்துகொண்டிருந்தனா்.

மணப்பாடு பாலம் அருகே வந்தபோது இந்த வேனும் எதிரே கன்னியாகுமரியைச் சோ்ந்த தீயணைப்பு வீரா் அகிலன் குடும்பத்தினா் வந்த வேனும் மோதிக்கொண்டன.

இதில் அகிலனின் வேனை ஓட்டி வந்த அகஸ்தீஸ்வரத்தை சோ்ந்த சுரேஷ் (45), அவரது வேனில் வந்த ஜாா்ஜ், அவரது மனைவி வசந்தி ஆகியோா் காயமடைந்து திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் திங்கள்கிழமை காலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com