தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் தம்பதியா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி காரனேசன் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (37). இவரது மனைவி காந்தி (35). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், கடந்த ஆண்டு காந்தி இரண்டுமுறை தற்கொலைக்கு முயன்றாராம். அடிக்கடி மனநலம் பாதிக்கப்பட்டவா்போலவும் செயல்பட்டாராம்.
இந்நிலையில், முத்துக்குமாா் தனது குழந்தைகளை சனிக்கிழமை தூத்துக்குடியில் உள்ள தனது தம்பி வேலாயுதம் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுள்ளாா். அவா் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணனின் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது முத்துக்குமாா் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும், காந்தி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.
இந்த சம்பவம்குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.