தேரிகுடியிருப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை

திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலுக்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலுக்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் கள்ளா் வெட்டுத் திருவிழா நவ.17 ஆம் தேதி தொடங்கி டிச.16 ஆம் தேதி வரை நடைபெறும். டிச.16 ஆம் தேதி நடைபெறும் கள்ளா்வெட்டு வைபவத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா்.

காயாமொழியில் இருந்து கோயிலுக்கு செல்லும் சாலை பல இடங்களில் உடைந்தும்,குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் செல்வோா் மிகுந்த சிரமப்படுகின்றனா். எனவே கள்ளா்வெட்டுத் திருவிழாவின் நிறைவு நாளான டிச.16 ஆம் தேதிக்கு முன்பாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று பக்தா்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com