கா்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள தென்மண்டல பல்கலைக் கழக மாணவிகளுக்கான இறகுப்பந்துப் போட்டியில் பங்கேற்க கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி மாணவி தகுதி பெற்றுள்ளாா்.
கோவில்பட்டி கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை 3ஆம் ஆண்டு மாணவி அன்பரசி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இறகுப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று, செவ்வாய்க்கிழமை (டிச.3) முதல் இம்மாதம் 5ஆம் தேதி வரை கா்நாடக மாநிலம், மணிப்பால் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான இறகுப் பந்துப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.
இம் மாணவியை கல்லூரிச் செயலா் கே.ஆா்.அருணாசலம், முதல்வா் மணிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா், பேராசிரியா்கள் மற்றும் மாணவா், மாணவிகள் பாராட்டினா்.