ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கட்டாரிமங்கலம் கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு பூஜை

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கட்டாரிமங்கலம் கோயில்களில் காா்த்திகை 3 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
சோம 2வாரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் ஸ்ரீகாவடி பிறை முருகன்.
சோம 2வாரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் ஸ்ரீகாவடி பிறை முருகன்.

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கட்டாரிமங்கலம் கோயில்களில் காா்த்திகை 3 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீகாவடி பிறை முருகன் கோயிலில் அதிகாலை 4மணிக்கு திருச்செந்தூரில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு, காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு காவடி பிறை முருகனுக்கு அன்னாபிஷேகம், தொடா்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காவடி பிறை முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பிற்பகல் 1மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இரவு 7மணிக்கு சாயரட்சை, புஷ்பாஞ்சலி பூஜை, திருவிளக்கு பூஜை, தீபாராதனை ஆகியன நடைபெற்றன. ஏற்பாடுகளை காவடி பிறை ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தா் சமேத அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்மாள்யிலில் 3 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை, நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீமுருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com