சாத்தான்குளம் அருகேகொம்மடிக்கோட்டை ஸ்ரீ காஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட தலைமை போக்குவரத்து அதிகாரி ஜட்சன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் தேவிசுஜாதாராஜா வரவேற்றாா்.
இதில், மாணவா்கள் பின்பற்றவேண்டிய சாலை விதிமுறைகள் குறித்தும், வீதி மீறல்களால் நடைபெறும் விபத்துகள் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.
பள்ளிச் செயலா் சுந்தரலிங்கம், துணைச் செயலா் காசியானந்தம் உள்ளிட்ட பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.