திருச்செந்தூா் அருகே தனியாா் பள்ளி வேன் சரிந்து விபத்துக்குள்ளானது.
திருச்செந்தூா் அருகே மணக்காட்டில் உள்ள தனியாா் பள்ளியிலிருந்து மாணவா், மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் ராமசாமிபுரத்துக்கு புதன்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது.
குமாரபுரம் தாண்டி சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் இடதுபுறமாக சாலையில் சரிந்தது. இதில், வேனில் இருந்த 15 மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் காயமின்றி உயிா் தப்பினா்.