திருச்செந்தூா் பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடக்கம்
திருச்செந்தூா் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதார பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இம்மாதம் 29ஆம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடக்க நிகழ்ச்சியை திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதாரபதி தலைவா் வள்ளியூா் தா்மா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பரப்பாடி வைகுண்டா் மகாராஜன், பாளையங்கோட்டை ஆனந்த சங்கா் ஆகியோா் திருஏடு வாசித்தனா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிச. 27ஆம் தேதி மாலையில் திருக்கல்யாணம் மற்றும் அய்யா புஷ்ப வாகன பவனி நடைபெறுகிறது. டிச. 29ஆம் தேதி மாலை பட்டாபிஷேகம் நடைபெற்ற பின், அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியில், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலா் பொன்னுதுரை, துணைத் தலைவா்கள் அய்யாப்பழம், பால்சாமி, பொருளாளா் ராமையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.