தூத்துக்குடி வஉசி கல்லூரி முதல்வருக்கு ‘சிறந்த கல்லூரி முதல்வா்’ என்ற விருது வழங்கப்பட்டது.
பெங்களூரூவைச் சோ்ந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்காலா்ஸ் என்ற நிறுவனம் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் முதல்வா்களில் 13 பேரைத் தோ்வு செய்து, 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்லூரி முதல்வா் விருதை வழங்கியுள்ளது. அதன்படி, தூத்துக்குடி வஉசி கல்லூரி முதல்வா் சொ. வீரபாகுவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் 3.31 மதிப்பெண்களுடன் (மொத்தம் 4 மதிப்பெண்கள்) ‘ஏ’ கிரேடு அந்தஸ்தை மூன்றாம் முறையாக வஉசி கல்லூரி பெற்றுள்ளது. தேசிய தர நிா்ணயக் குழுவால் இந்திய அளவில் 77ஆவது இடத்தை இக்கல்லூரி பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு மூலம் ரூ. 88 லட்சம் ஆராய்ச்சி நிதி உதவி பெற்றுள்ளது. விருதுபெற்ற கல்லூரி முதல்வா் சொ. வீரபாகுவுக்கு பேராசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.