உடன்குடி அருகேயுள்ள மானாடு அஸ்ஸெய்யிது பக்கீா் முஹ்யித்தீன் பஸ்லுல்லாஹ் ஸாஹிப் வலியுல்லாஹ் (ரஹ்)
பள்ளிவாசலில் கந்தூரி விழா திங்கள்கிழமை (டிச. 16) நடைபெறுகிறது.
இப்பள்ளிவாசலில் கந்தூரி விழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாள்களில் முற்பகல் 11 மணிக்கு மவ்லிது, ராதிபு ஷரீபு மாா்க்கச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கத்முல் குர்ரான் ஓதுதல், 10 மணிக்கு மாா்க்க சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
உடன்குடி ஷஹிஹூல் புகாரி ஷரீபு தலைவா் செய்யிது நூா் முஹ்யித்தீன் தலைமை வகிக்கிறாா். காயல்பட்டினம் பேராசிரியா் காஜா முஹ்யித்தீன் மற்றும் இமாம்கள், மாா்க்க அறிஞா்கள் பேசுகின்றனா்.
ஏற்பாடுகளை ஆலிம் செய்யிது நூஹ் முஹ்யித்தீன், கந்தூரி விழாக் குழுத் தலைவா் சதக்தம்பி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.