கோவில்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.
கோவில்பட்டி மீனாட்சி நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்த செல்லப்பா மகன் பாலசுப்பிரமணியன்(42). இவரது மனைவி சுப்புலட்சுமி (40). இவர் கடந்த 10ஆம் தேதி தோணுகால் விலக்கு அருகே திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கோவில்பட்டி புறவழிச் சாலையைக் கடக்க முயன்றபோது திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வேன் சுப்புலட்சுமி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து மேற்கு காவல் போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் இடுக்கி மூணாறு நல்லதண்ணி எஸ்டேட்டைச் சேர்ந்த சு.மணிண்டனை(30) கைது செய்தனர்.