கயத்தாறு அருகே மூதாட்டி மீது தாக்குதல்

கயத்தாறு அருகே மூதாட்டியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 

கயத்தாறு அருகே மூதாட்டியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
கயத்தாறு அருகேயுள்ள ராஜாபுதுக்குடி நடுத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி சண்முகவடிவு (75). இவரது வீட்டின் அருகில் வசித்து வரும் முத்துமாலை மகன் கூலித் தொழிலாளி கண்ணன் (40). இருவருக்கும் இடையே ஏற்கெனவே விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சண்முகவடிவை கம்பால் தாக்கிய கண்ணன், மிரட்டல் விடுத்தாராம். புகாரின் பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com