இந்திய ரயில்வேயில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் ரயில்வே துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து www.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் ஜன. 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்கள் இணையதளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.