கோவில்பட்டி அருகே லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி சாத்தூர் சாலை ஏ.என்.ஏ. நகரைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் முத்துமாரியப்பன் (37). லாரி ஓட்டுநரான இவர், வெள்ளிக்கிழமை அதிகாலையில் மூன்றடைப்புக்குச் சென்று வாழைக்காய் எடுப்பதற்காக லாரியை ஓட்டிச் சென்றாராம்.
அப்போது, திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியையடுத்த இடைசெவல் அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்தியிருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரைத் தாக்கிவிட்டு, லாரியில் வைத்திருந்த ரூ.46ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டனராம். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.