கயத்தாறில் அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட முயன்ற 35 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி, பாஜக மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமையில், கயத்தாறு அகிலாண்டேஸ்வரி கோயில் முன்பிருந்து புறப்பட தயாரானது.
காவல் துறையின் அனுமதியின்றி இப்பேரணி புறப்பட இருந்தது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், பேரணியில் ஈடுபட முயன்ற 35 பேரையும் கைது செய்தனர்.