கழுகுமலை கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதையொட்டி கோயில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு கொடியேற்றம், சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. விழாநாள்களில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும். 10ஆம் திருநாளான இம்மாதம் 21ஆம் தேதி தேர் திருவிழா நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com