கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா (இளைஞர் எழுச்சி நாள்) மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ராஜாமணி, மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளை வழங்கினார்.
ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் குமாரமுருகன், கரோலின் ஸ்டெபி ஆகியோர் செய்திருந்தனர்.