சந்தையடியூர் நாராயண சுவாமி கோயிலில் பால்முறைத் திருவிழா தொடக்கம்

உடன்குடி சந்தையடியூர் நாராயண சுவாமி கோயிலில், தை மாத பால்முறைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.


உடன்குடி சந்தையடியூர் நாராயண சுவாமி கோயிலில், தை மாத பால்முறைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி அய்யா அன்று இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்திலும், சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாக வாகனத்திலும் முக்கிய வீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து விழா நாள்களில் கருடர், குதிரை, அனுமார், பூஞ்சப்பரங்களில் அய்யா பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, தர்மம் எடுத்தல், சந்தனக்குடம் எடுத்தல், உம்பான் தர்மம் வழங்கல், விளக்கு வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com