திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதியில் மதுவை பதுக்கி வைத்து விற்றதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் தாலுகா சிறப்பு உதவி ஆய்வாளர் பால்ராஜ் தலைமையிலான போலீஸார், அடைக்கலாபுரம் பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம்.
அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்டபோது, அவர், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
விசாரணையில் அவர், காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்துப்பாண்டி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 26 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.