சாத்தான்குளம் ஒன்றிய ஸ்ரீ ஹரி ஓம் இந்து சேவா சங்கம் சார்பில் சாத்தான்குளம் ஸ்ரீ பஞ்சபிரமை அம்பிகை மடம் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் மார்கழி திருப்பள்ளியெழுச்சி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீபஞ்சபிரமை அம்பிகை, ஸ்ரீசுப்பிரமணிசுவாமி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைப்பின் தலைவர் சொ.பழனிவேல், துணைத்தலைவர் ச. மகராஜன், செயலர்கள் லெ.கார்த்திகேயன், ரெ. சுடலைமுத்து, பொருளாளர் ரா.ஆறுமுகநயினார்,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ப. அழகு சுப்பிரமணியன், நா.வள்ளிநாயகம், ச.கோபால கிருஷ்ணன், த.அருண்குமார், சு.முத்துராமன், உறுப்பினர்கள், பஜனை குழுவினர் கலந்துகொண்டனர்.