சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி அருகேயுள்ள சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

தூத்துக்குடி அருகேயுள்ள சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி மாலை 6.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் சகாய ஜோசப் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அருள்தந்தைகள் அந்தோணி தாஸ், மரிய அரசு, சகாய ஜஸ்டின் ஆகியோர் மறையுரையாற்றினர். 
ஜன.26ஆம் தேதி 95ஆவது ஆண்டு திவ்ய நற்கருணை பவனி,  27ஆம் தேதி ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி ஆகியவை நடைபெறுகின்றன. விழா நாள்களில் காலையில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை இருதயராஜா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com