ஆறுமுகனேரி நடுத் தெருவில் உள்ள அருள்மிகு பிரம்ம சக்தி அம்மன் கோயிலில், பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பி.கெளரி, வெ.குணசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.