மீரான்குளத்தில் நாளை முன்னோடி மனுநீதி நாள் முகாம்

சாத்தான்குளம் அருகே மீரான்குளம் கிராம சமுதாய நலக்கூடத்தில் புதன்கிழமை( ஜூலை 3)  முன்னோடி மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது.

சாத்தான்குளம் அருகே மீரான்குளம் கிராம சமுதாய நலக்கூடத்தில் புதன்கிழமை( ஜூலை 3)  முன்னோடி மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது.
  இது குறித்து வட்டாட்சியர் ஞா. ஞானராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தான்குளம் வட்டத்துக்கு உள்பட்ட மீரான்குளம் 2 கிராமத்தில் , திருச்செந்தூர்  வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்னோடியாக மனுக்கள் பெறும் முன்னோடி மனுநீதிநாள் முகாம்  புதன்கிழமை (ஜூலை 3 ) முற்பகல் 11 மணிக்கு மீரான்குளம் கிராம சமுதாய நலக்கூடத்தில் நடைபெறுகிறது. 
ஆதலால் கிராம மக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை இம்முகாமில் கொடுத்து பயன்பெறலாம். பெறப்படும் மனுக்களுக்கு மனுநீதிநாளில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்  என  தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com