10 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. அதன்படி, தூத்துக்குடி வட்டம் உமரிக்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் வட்டம் பத்மநாபமங்கலம், திருச்செந்தூர் வட்டம் மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் வட்டம் சாஸ்தாவிநல்லூர், கோவில்பட்டி வட்டம் ஊத்துப்பட்டி, விளாத்திகுளம் வட்டம் கீழவிளாத்திகுளம் பகுதி-1, எட்டயபுரம் வட்டம் புங்கவர்நத்தம், ஓட்டப்பிடாரம் வட்டம் வெள்ளாரம், கயத்தாறு வட்டம் தொட்டம்பட்டி - கோவிந்தம்பட்டி, ஏரல் வட்டம் தேமாங்குளம் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
முகாமின்போது, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com