திருச்செந்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட உபமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆலந்தலை, தோப்பூர், அமலிநகர், கல்லாமொழி மற்றும் திருச்செந்தூர் பால்பண்ணைத் தெரு, தெற்குப் புதுத்தெரு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.