கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக சுமை தூக்கும் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கோவில்பட்டியையடுத்த வடக்கு திட்டங்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முத்து மகன் ராஜா(47). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இவரது மனைவி மாரித்தாய். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.