பைக் மீது லாரி மோதல்: மின்வாரிய ஊழியர் காயம்

சாத்தான்குளம் அருகே பைக் மீது லாரி மோதியதில் நாசரேத் மின்வாரிய ஊழியர் காயமடைந்தார்.


சாத்தான்குளம் அருகே பைக் மீது லாரி மோதியதில் நாசரேத் மின்வாரிய ஊழியர் காயமடைந்தார்.
சாத்தான்குளம் சண்முகநகரம் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் மணிகண்டன் (39). இவர், நாசரேத் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கராக வேலை செய்து வருகிறார்.
அவர் வெள்ளிக்கிழமை பைக்கில் நாசரேத்திலிருந்து சாத்தான்குளம் வந்து கொண்டிருந்தபோது, பன்னம்பாறை வள்ளியம்மாள்புரம் அருகே, எதிரே வந்த லாரி மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவர்  நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com