நாசரேத்தில் நீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்
By DIN | Published On : 30th July 2019 07:40 AM | Last Updated : 30th July 2019 07:40 AM | அ+அ அ- |

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தார். வேதியியல் துறைத் தலைவர் ஜேனட் சில்வியா ஜெப ரோஸ் முன்னிலை வகித்தார். நாசரேத் காவல் ஆய்வாளர் அருள் ஜார்ஜ் சகாயமேரி சாந்தி, பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். பேராசிரியர்கள் சுதா பிலோமினா, ஜெபஸ்டின் ஆண்ட்ரூஸ் மற்றும் மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.