தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகர்புற மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜூன் 15) நடைபெறுகின்றன. இதன் காரணமாக அன்றையதினம் காலை 9 முதல் நண்பகல் 1 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
ஓட்டப்பிடாரம்: பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 15) ஓட்டப்பிடாரம், பாஞ்சாலங்குறிச்சி, குறுக்குச்சாலை, புதியம்புத்தூர் பகுதிகளில் காலை 9 முதல் நண்பகல் 1 மணி மின்விநியோகம் இருக்காது.
கோவில்பட்டி பகுதியில்... கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம். சகர்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கோவில்பட்டி கோட்ட மின்வாரியத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் தடைபடும். அதன்படி, காலை 9 முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கழுகுமலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பகல் 1 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சாத்தான்குளம் பகுதியில்... திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் (பொ) ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தான்குளம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் இந்த மின் நிலையத்தைச் சார்ந்த சாத்தான்குளம், முதலூர், நாசரேத் துணை மின் நிலையத்தைச் சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, செம்மறிக்குளம் துணை மின் நிலையத்தைச் சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, பழனியப்பபுரம் துணை மின் நிலையத்தைச் சார்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தைச் சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.