வேம்பார் அருகே நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வேம்பார், நடுத்தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன் (35). இவர் தன் நண்பர் மாரியப்பனுடன் பைக்கில் புதன்கிழமை இரவு சூரன்குடிக்குச் சென்று கொண்டிருந்தாராம். வேம்பார் விலக்கில் உள்ள வேகத்தடையில் பைக் மோதி கீழே விழுந்ததாம். இதில், மகாராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாரியப்பன் காயமடைந்தார்.
போலீஸார் சென்று மாரியப்பனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்; மகாராஜனின் சடலத்தை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சூரன்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.