ஆறுமுகனேரி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பள்ளிப்பத்து பகுதியில் புதன்கிழமை (ஜூன் 26) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆறுமுகனேரி துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் 11 கே.வி. குரும்பூர் பீடரில் புதிய மின்மாற்றி கட்டமைப்பு நிறுவும் பணி புதன்கிழமை நடைபெற உள்ளதால் ஜெருசலேம், மேல பள்ளிப்பத்து, பள்ளிப்பத்து, பள்ளிப்பத்து கஸ்பா மற்றும் ஊத்தங்கரைவிளை ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.