ஆறுமுகனேரியில் தீ விபத்து: 5 கடைகள் எரிந்து நாசம்

ஆறுமுகனேரி பஜாரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரிட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்தன. இதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது.

ஆறுமுகனேரி பஜாரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரிட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்தன. இதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது.
ஆறுமுகனேரி பிரதான பஜாரில், ஆறுமுகனேரியில் இருந்து காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கும், அடைக்கலாபுரம் வழியாக திருச்செந்தூருக்கும், மூலக்கரை, அம்மன்புரம் வழியாக திருநெல்வேலிலிக்கும், ஆறுமுகனேரியில் இருந்து தூத்துக்குடிக்கும் செல்லும் 4 சாலைகள் சந்திக்கும் சந்திப்பு உள்ளது. மூலக்கரை, அம்மன்புரம் செல்லும் சாலையில் இருசக்கர வாகன காப்பகம் உள்ளது.
 இதன் முன்புறம் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பழுது நீக்கும் கடை,  கறிக்கடை,  பூக்கடை, மிட்டாய் கடை ஆகியவை உள்ளன. 
மிட்டாய் கடைக்கு இடையே விறகுகள் அடுக்கி வைக்கும் கிடங்கும் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இந்தக் கடைகள் அனைத்தும் எரிந்தன.
சம்பவம் குறித்து சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உள்ள தீயணைப்புத் துறைக்கும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து நிலைய அதிகாரி நட்டார் ஆனந்தி, தலைமைக் காவலர் த லிங்கதுரை மற்றும் தீயணைப்பு வீரர்களும், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன தீயணைப்புத் துறை வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து சாம்பலானது. மேலும் இருசக்கர வாகன காப்பகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 சைக்கிள்களும் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்து குறித்து ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com