கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் செஞ்சுருள் சங்க தொண்டர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சு.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கோவில்பட்டி அரசு மருத்துவமனை நம்பிக்கை மையத்தைச் சேர்ந்த சுதா, சாந்தா,ரேவதி ஆகியோர் செஞ்சுருள் சங்கம் பற்றியும், ஹெச்.ஐ.வி. குறித்தும் மாணவர், மாணவிகளிடையே கலந்துரையாடினர். தொடர்ந்து, மாணவர், மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்கப் பொறுப்பாளர் கவிதாமஞ்சு செய்திருந்தார்.