ஸ்டெர்லைட் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில், தூத்துக்குடி மற்றும் கூட்டாம்புளியில் மரக்கன்றுகள் நடும் பணி அண்மையில் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில், தூத்துக்குடி மற்றும் கூட்டாம்புளியில் மரக்கன்றுகள் நடும் பணி அண்மையில் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தனது பன்னாட்டு சமூக பொறுப்புறுதி திட்டத்தின் கீழ்  தூத்துக்குடி புனித ஆன்ட்ரூஸ் தேவாலய வளாகத்திலும்,  தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி நடுநிலைப் பள்ளியிலும் மரக்கன்றுகள் நடும் பணிகளை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் பொது மேலாளர் எம். ராதாகிருஷ்ணன், மேலாளர் கே. சாய்சுந்தர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில்,  கூட்டாம்புளி குருசேகர தலைவர் டேவிட் அதிசயம்,  உபதேசியார் வேதமாணிக்கம்,  நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கோயில்பிள்ளை,  பாலசேகர் மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமையாசிரியர் சாது செல்வராஜ், வாகைக்குளம் சந்தையின் தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com