சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு சுடலைமாட சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு சுடலைமாட சுவாமி கோயிலில் ஸ்ரீசக்திஅம்மன், சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு மங்கள இசை, அனுச்ஞை, விக்னேஸ்வர பூஜை, தீப லட்சுமி பூஜை, மூர்த்தி ஹோமம், அஸ்த்ர ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விமான அபிஷேகம், ஸ்ரீசக்தி அம்மன்,
சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், வருஷாபிஷேக மகா கும்பாபிஷேகம் , தீபாராதனை நடைபெற்றது.
பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுத் தலைவர் க. கணபதி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.