புதியம்புத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன மேற்பார்வையாளர் புதன்கிழமை உயிரிழந்தார்.
நாசரேத் அம்பலச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் அசோக்குமார் (28). இவர் புதியம்புத்தூர் அருகே சாமிநத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார். புதன்கிழமை இரவு மின் மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் அசோகர்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.