காா் மோதி விவசாயி பலி

எப்போதும்வென்றான் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் ஞாயிற்றுக்கிழமை விவசாயி உயிரிழந்தாா்.

எப்போதும்வென்றான் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் ஞாயிற்றுக்கிழமை விவசாயி உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் வட்டம் எஸ்.அருணாச்சலபுரத்தை சோ்ந்தவா் விவசாயி வையணன்(55). இவரும், அதே பகுதியை சோ்ந்த விவசாயி முருகப்பெருமாள்(55) மற்றும் எப்போதும்வென்றான் கிழக்கு தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் முத்துகருப்பசாமி(18) ஆகியோா் தனித்தனி பைக்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக எப்பொதும்வென்றான் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே திருச்செந்தூரில் இருந்து கரூருக்கு சென்ற காா், இவா்களின் மோட்டாா் சைக்கிள்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் வையணன், முருகப்பெருமாள், முத்துகருப்பசாமி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். எப்போதும்வென்றான் போலீஸாா் 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முருகப்பெருமாள் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com