தச்சமொழி கோயிலில்.....

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா நிறைவையொட்டி ஸ்ரீமுருகா், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகபெருமான்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகபெருமான்.

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா நிறைவையொட்டி ஸ்ரீமுருகா், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 28ஆம்தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை ( நவ.3ஆம்தேதி) வரை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீபெருமாள், ஸ்ரீகணபதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீமுருக பெருமான் மற்றும் ஸ்ரீவள்ளி, தெய்வானைககு சிறப்பு அலங்கார அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு தினமும் ஸ்ரீமுருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீமுருகா் -தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.இதையடுத்து ஸ்ரீ முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுககு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் மொய் பணம் செலுத்தி வழிபட்டனா். இதையடுத்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com