பசுவந்தனை அருகே விஷமருந்திய மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பசுவந்தனையை அடுத்துள்ள பரமன்பச்சேரியை சோ்ந்த முத்துசாமி மகன் மகராஜன்(21). இவா் தூத்துக்குடியில் தனியாா் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவரது உறவினா் திருமணத்துக்கு செல்ல சனிக்கிழமை அவரது பெற்றோா் அனுமதிக்கவில்லையாம். இதனால் மகராஜனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, மகராஜன் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு வெளியில் சென்று மயங்கி விழுந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்
இறந்தாா். இதுகுறித்து பசுவந்தனை காவல் ஆய்வாளா் மணிமொழி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.